;
Athirady Tamil News

பண்டாரநாயக்கவின் பின், அவரது அடிச்சுவட்டில்

0

தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ

பண்டாரநாயக்க 1959இல் கொலை செய்யப்பட்டவையானது சுதந்திரத்திற்கு பிந்தைய இலங்கையின் ஒரு தசாப்தகால பொருளாதாரக் கொள்கைகளை முடிவுக்குக் கொண்டுவந்தது.

சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கையின் பொருளாதார விரிவாக்கத்தைத் துரிதப்படுத்தும் முயற்சியின் சில வெற்றிகளையும், அந்த முயற்சி உருவாக்கிய சில சிக்கல்களையும் ஆராய்ந்த பிறகே, 1960 முதல் காலகட்டம் பற்றிய விவாதத்திற்குச் செல்ல முடியும்.

அபிவிருத்தி முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என்ற உண்மையை நாம் ஏற்றாக வேண்டும். டிசெம்பர் 1960 முதல் கடுமையான இறக்குமதி மற்றும் பரிமாற்றக் கட்டுப்பாடுகளை வன்முறையாகவும் அவசரமாகவும் அரசாங்கம் விதித்தது,

அன்றிலிருந்து தீவின் மக்கள் மீது சுமத்தப்பட்ட துன்பங்கள் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட வளர்ச்சியின் மந்தநிலை அனைத்தும் ஏதோ ஒரு வகையான அடிப்படைத் தோல்வியைக் குறிக்கின்றன.

1950களின் அபிவிருத்தி முயற்சியில் ஏற்பட்ட தோல்வி, உண்மையான உற்பத்தி வளர்ச்சியின் நியாயமான திருப்திகரமான விகிதத்தை வழங்கத் தவறியதால் ஏற்பட்டதல்ல, மாறாக இந்த வளர்ச்சியின் இயல்பான விளைவாக ஏற்பட்ட செலவின ஓட்டங்களை போதுமான அளவு கையாளத் தவறியமையால் ஏற்பட்டது.

தனியார்த் துறையில் அதிக நுகர்வு மற்றும் இறக்குமதி போக்குகள், பொது வருவாயில் மந்தநிலை, பொது முதலீட்டு ஒதுக்கீட்டில் உள்ள குறைபாடுகள், போதுமான அளவு முதலீட்டைத் தூண்டத் தவறியது போன்றனவே இதற்கான காரணங்களாகும்.

இந்தப் பற்றாக்குறைகள் எதுவும் பொருளாதாரத்தின் தொடர்ச்சியான சீரான செயல்பாட்டிற்கு ஆபத்தானவை அல்ல. அவை அனைத்தும் அடையக்கூடிய உற்பத்தி வளர்ச்சி விகிதத்தைக் குறைக்க உதவியது, மேலும் அவை அனைத்தும் அதிகரித்து வரும் வரவு – செலவு சமநிலை (balance of payments) அழுத்தங்களுக்குப் பங்களித்தன.

ஆனால், போதுமான பொதுக் கொள்கைகள் இயற்றப்பட்டிருந்தால், குறைந்த வளர்ச்சி விகிதத்தில் வெளிப்புற சமநிலையை அடைந்திருக்கலாம்.

அபிவிருத்திச் சூழலில் அதிகப்படியான மொத்த தேவையின் தோற்றம் இயல்பானது, ஆனால், நடப்பு மற்றும் மூலதனச் செலவினங்கள் முறையே வெளிப்புறப் பற்றாக்குறைகள் மூலம் நிதியளிக்கப்படும் விகிதாச்சாரத்தில் இது ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.

அதிக நடப்புச் செலவினங்களை முதலீடாக மாற்றுவதன் மூலம் அதிக வளர்ச்சி

You might also like

Leave A Reply

Your email address will not be published.