;
Athirady Tamil News

உலக பட்டினி தினத்தன்று, பட்டினியைப் போக்கினார் “M.F” பொருளாளர் செல்வி றம்மியா (வீடியோ படங்கள்)

0

உலக பட்டினி தினத்தன்று பட்டினியைப் போக்கினார், “M.F” பொருளாளர் செல்வி றம்மியா (வீடியோ படங்கள்)

உலக பட்டினி தினத்தன்று பட்டினியைப் போக்கினார், “M.F” பொருளாளர் செல்வி றம்மியா செல்வராஜா..
##################################

உலக பட்டினி தினமாகிய இன்று வாழ்வாதாரத்தை இழந்து அடுத்தவேளை உணவுக்கு அல்லல்படும் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கினார் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” கௌரவப் பொருளாளர் செல்வி றம்மியா செல்வராஜா அவர்கள்.

கடந்த வாரத்தில் தனது பிறந்தநாளைக் கொண்டாடிய “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” கௌரவ பொருளாளர் செல்வி. றம்மியா செல்வராஜா அவர்கள் உலக பட்டினி தினமாகிய இன்று நாட்டின் பயணத்தடை காரணமாக வருமானத்தை இழந்து பிள்ளைகளுடன் பட்டினி நிலையை எதிர்நோக்கிய நிலையில் வாழும் குடும்பங்களுக்கு தனது பிறந்தநாளை முன்னிட்டு செல்வி றம்மியா செல்வராஜா அவர்கள் உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்.

வவுனியா நெளுக்குளம் கூமாங்குளம் வீதியில் வசிக்கும் நான்கு பிள்ளைகளைக் கொண்ட குடும்பம், கடந்த நான்கு நாட்களாக ஒருவேளை உணவுடன் வாழ்வதாக மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் கிராமிய இணைப்பாளர் திருமதி பவளம் அவர்கள் கூறினார்.

அதேவேளை நெளுக்குளம் செட்டிக்குளம் வீதியில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் கடந்த இரண்டு நாட்களாக சாப்பாடு இன்றி வாழ்வதாக கூறினார் அத்தோடு 85 வயதில் யாருமின்றி தனித்து வாழும் அம்மா ஒருவர் பற்றிய விபரமும் கிடைக்கப் பெற்றது..

உடனடியாகவே இவ்வாறான குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கி வைக்கும்படி தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது நிதிப்பங்களிப்பில் கொடுக்கும்படி செல்வி றம்மியா செல்வராஜா கேட்டுக் கொண்டார் .

அத்தோடு மிகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினை தெரிவு செய்து அவர்களுக்கான துவிச்சக்கர வண்டி ஒன்றினை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தை கேட்டுக் கொண்டார்.

அந்த வகையில் கோயில்குளம், நெளுக்குளம், கூமாங்குளம். போன்ற கிராமங்களில் வசிக்கும் தேவையுடைய மக்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. இதேவேளை “மாணிக்கதாசன் நற்பணி மன்றமும்” செல்வி றம்மியா செல்வராஜா வுக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
28.05.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.