;
Athirady Tamil News

பாகிஸ்தானில் மரம் வெட்டுவது தொடர்பான தகராறில் 7 பேர் கொலை!

0

வடமேற்கு பாகிஸ்தானில் மரம் வெட்டுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு வன்முறையாக மாறியதில் எதிரெதிர் குழுக்கள் துப்பாக்கிச்சூடு நடத்தின. இதில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டதாகவும் மூன்று பேர் காயமடைந்ததாகவும் காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (மே 12) தெரிவித்தனர்.

கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள நௌஷேரா மாவட்டத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து காவல்துறையினர் தெரிவித்ததாவது:

“மரம் வெட்டுதல் தொடர்பாக இரு குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இது வன்முறையாக மாறியதில் ஏழு பேர் கொல்லப்பட்டதோடு மூன்று பேர் காயமடைந்தனர்.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததையடுத்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக நௌஷேரா மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.