;
Athirady Tamil News

யாழ். மாவிட்டபுரத்தை சேர்ந்த மலேசியா பார்த்தீபன் அவர்களின் நினைவாக உலருணவுப் பொதிகள் வழங்கல்.. (படங்கள், வீடியோ)

0

யாழ். மாவிட்டபுரத்தை சேர்ந்த மலேசியா பார்த்தீபன் அவர்களின் நினைவாக உலருணவுப் பொதிகள் வழங்கல்.. (படங்கள், வீடியோ)
############################################

கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும்..

மண் விட்டு மறைந்து -நீங்கள்
விண்நோக்கிச் சென்றாலும்
மனம் விட்டு மறையாமல்
எந்நாளும் வாழ்வீர்கள்..

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும் கோலாலம்பூர் – மலேசியாவை வசிப்பிடமாகவும் கொண்ட தீபன் என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் அமரர் திரு. பரராசசிங்கம் பார்த்தீபனின் 31 ந் நாள் நினைவு நாளை முன்னிட்டு வன்னி எல்லைக் கிராமப் பிரதேசங்களில் பல்வேறுதரப்பட்ட பணிகள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினரால் இன்றுமாலை முன்னெடுக்கப்பட்டது.

பரராசசிங்கம் (தெல்லிப்பழை) சிவஇன்பநாயகி (வீமன்காமம்) தம்பதிகளின் பாசமிகு மகனும், இன்பரதி, பரந்தாமன் ஆகியோரின் பாசமிகு சகோதரனுமான, யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும் கோலாலம்பூர் – மலேசியாவை வசிப்பிடமாகவும் கொண்ட தீபன் என அன்புடன் அழைக்கப்படும் அமரர் திரு. பரராசசிங்கம் பார்த்தீபனின் 31 ந் நாள் நினைவேந்தலில் அவரின் ஆத்மசாந்திக்காக இறைவனை வேண்டி, அவரின் ஞாபகார்த்தமாக நோர்வேயில் வசிக்கும் அவரது சகோதரரான பரராசசிங்கம் பரந்தாமனால் பெறுமதியான உலருணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

இன்றுமாலை வன்னி எல்லைக் கிராமத்தில் வதியும் வறுமைக் கோட்டில் வாழும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களை சேர்ந்த சிலருக்கு வாழ்வாதார உதவியாக பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் அமரர் திரு. பரராசசிங்கம் பார்த்தீபனின் நினைவாக நினைவுக்கு கஞ்சியும் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முதலில் நிகழ்வில் தீபன் என அன்புடன் அழைக்கப்படும் அமரர் திரு. பரராசசிங்கம் பார்த்தீபனின் 31 ந் நாள் நினைவேந்தலில் அவரின் ஆத்மசாந்திக்காக இறைவனை வேண்டி, திருவுருவப் படத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டு, மலரஞ்சலி செய்யப்பட்டு, தேவாரபாராயணம் பாடப்பட்டு நினைவஞ்சலி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கிராமத்தில் வதியும் வறுமைக் கோட்டில் வாழும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களை சேர்ந்த சிலருக்கு வாழ்வாதார உதவியாக பெறுமதியான உலருணவுப் பொதிகளும், வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வில், “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வவுனியா மாவட்ட பொறுப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் ஒழுங்கமைப்பில் மாணிக்கதாசன் நற்பணி மன்ற கிராமிய ஒருங்கிணைப்பாளர்களும் மற்றும் அக்கிராம முக்கியஸ்தர்கள் ஆகியோருடன் அக்கிராமப் பொதுமக்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

அமரத்துவமடைந்த தீபன் என அன்புடன் அழைக்கப்படும் அமரர் திரு. பரராசசிங்கம் பார்த்தீபனின் 31 ந் நாள் நினைவேந்தலில் அவரின் ஆத்மசாந்திக்காக இறைவனை வேண்டி, தாயக உறவுகளோடு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் ஆழ்ந்த இரங்கலோடு அஞ்சலி செலுத்துவதோடு அமரர் திரு. பரராசசிங்கம் பார்த்தீபனின் நினைவு நிகழ்வுக்கு நிதிப் பங்களிப்பினை வழங்கிய அவரது சகோதரர் குடும்பத்துக்கும் தாயக உறவுகளுடன் இணைந்து “மாணிக்கதாசன் நற்பணி மன்றமும்” தனது மேலான நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

02.08.2023

யாழ். மாவிட்டபுரத்தை சேர்ந்த மலேசியா பார்த்தீபன் அவர்களின் நினைவாக உலருணவுப் பொதிகள் வழங்கல்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.