;
Athirady Tamil News

புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய மாணவர்களின் கல்விக்கு உதவிய சுவிஸ் இந்திரசீலன்.. (படங்கள்)

0

புங்குடுதீவு.கமலாம்பிகை மகா வித்தியாலய மாணவர்களின் கல்விக்கு உதவிய சுவிஸ் இந்திரசீலன்.. (படங்கள்)

யா/புங்குடுதீவு.கமலாம்பிகை மகா வித்தியாலயத்தில் தரம்-11 மாணவர்களுக்கு மேலதிக கற்றல் செயற்பாடாக கணித பாடம் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலையில் கற்பிக்கின்ற ஆசிரியரால் இன்று நடத்தப்பட்டது. மேற்படி கற்பித்தல் நிகழ்வில் அதிபர், உபஅதிபர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். அதே போல் நாளை விஞ்ஞான பாடமும் நடைபெறவுள்ளது.

இந்த வகுப்புகள் 40புள்ளிக்கும் குறைவாகப் பெற்ற பிள்ளைகள் 9பேர் உள்ளார்கள், இவர்களை சித்தி பெற வைக்க பாடசாலை கற்பித்தல் மட்டும் போதாது என்பதை ஆசிரியர்களும் பெற்றோர்களும் உணர்ந்து கூட்டத்தில் அதிபருக்கு முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக என்ன செய்வது? என்று சிந்தித்த வேளையில் ஏற்கனவே விளையாட்டு போட்டிக்கு தனிப்பட்ட ரீதியில் உதவிய சுவிஸ்றஞ்சன் அவர்களின் நினைவு வந்து, அவர் சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய தலைவராகவும் உள்ளதை அறிந்து, இக்கோரிக்கையை அவரிடம் முன்வைத்த போது அதனை அவர் புங்குடுதீவு மடத்துவெளியை சேர்ந்தவரும் சுவிஸ் பேர்னில் வதியும் சீலன் என அன்புடன் அழைக்கப்படும் திரு.இந்திரசீலன் மூலம் அவர்களின் உதவியுடன் இவ்வகுப்பு இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி இந்திரசீலன் இப்பாடசாலையின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

நான்கு பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் முதலில் இரண்டு பாடங்களுக்கான கோரிக்கையை முன்வைத்ததும் உடனடியாக அதனை ஏற்றுக் கொண்டு அதுக்குரிய பணத்தை அனுப்பி வைத்த திரு.இந்திரசீலன் குடும்பத்துக்கு எமது நன்றி. இன்னும் பல பாடங்களுக்கான தேவைப்பாடுகள் உள்ளது என்பதையும் முன்வைப்பதோடு தற்போது உதவிய நல்லுள்ளங்களுக்கு நன்றி.

தகவல்.. – பாடசாலை சமூகம் சார்பாக உபஅதிபர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.