;
Athirady Tamil News

புங்குடுதீவு அமரர்.வி.அ.சின்னப்பிள்ளை அவர்களின் பதினான்காம் ஆண்டு நினைவாக உலருணவுப் பொதிகள் வழங்கல்.. (படங்கள், வீடியோ)

0

புங்குடுதீவு அமரர்.வி.அ.சின்னப்பிள்ளை அவர்களின் பதினான்காம் ஆண்டு நினைவாக உலருணவுப் பொதிகள் வழங்கல்.. (படங்கள், வீடியோ)

அழியா நினைவுடன் பதினான்காவது ஆண்டு விழிநீர் அஞ்சலி..
அமரர்.திருமதி வி.அருணாசலம் சின்னப்பிள்ளை..

புங்குடுதீவில் ஏழாம் வட்டாரம் ஊரதீவில் பிறந்து, அமரத்துவடைந்த அமரர். வி.அருணாசலம் சின்னப்பிள்ளை அவர்களின் பதினான்காம் ஆண்டு நினைவாக இன்று மதியம் வன்னி எல்லைக் கிராமத்தில் உள்ள இடமொன்றில் தேவையுடையோர், நோய்வாய்ப்பட்டோர், முதியோர் உட்பட அனைவருக்கும் பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டு நினைவு கூறப்பட்டது.

புங்குடுதீவில் பிறந்து புங்குடுதீவு ஊரதீவு பகுதியில் சமூக, சமய பற்றுடன் வாழ்ந்த திருமதி. வி.அ.சின்னப்பிள்ளை அவர்களின் கணவர் “வினா.அனா” அன்றில் “ஒழுங்கு” என அன்புடன் அழைக்கப்படட பிரபல்யமான வர்த்தகர் அமரர் விசுவலிங்கம் அருணாசலம் அவர்களும், இவர்களின் பிள்ளைகள் அனைவருமே மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய பக்தராக, தொண்டராக, நிர்வாகசபை உறுப்பினர்களாக, அறங்காவலராக எனும் பல பொறுப்புக்களை வகித்து சமய, சமூகத் தொண்டில் சிறந்து விளங்குபவர்கள் என்பதுடன், அமரர்கள் அருணாசலம் சின்னப்பிள்ளை ஆகியோரின் பிள்ளைகள் இன்றும் அனைவரையும் அன்புடன் நேசித்து வாழ்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமரத்துவமடைந்த அமரர். சின்னப்பிள்ளை அவர்களின் நினைவாகவும், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டியும் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் முதலில் அன்னாரின் திருவுருவப் படத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டு, தேவாரபாராயணம் பாடப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேவேளை அமரர். சின்னப்பிள்ளை அவர்களின் நினைவாகவும், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டியும் மிகவும் கஷ்ரமான சூழ்நிலையில் வாழும் தேவையுடைய சிலருக்கு பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வானது மாணிக்கதாசன் நற்பணி மன்ற வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்களில் ஒருவரான திருமதி.பவளராணி நவரெட்ணம் அவர்களின் தலைமையில் மன்றத்தின் கிராமிய ஒருங்கிணைப்பாளர்கள் விருந்தினராகக் கலந்து சிறப்பிக்க நடைபெற்றது.

அமரர். சின்னப்பிள்ளை அவர்களின் பதினான்காம் ஆண்டு நினைவாக, நடைபெற்ற வாழ்வாதார உதவியாக பெறுமதியான உலருணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள், வழங்கி வைக்கப்பட்டதும்,
அன்னாரின் மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார் உறவுகள் சார்பாக அன்னாரின் மகனான சுவிஸில் வதியும் குழந்தை எனும் திரு.கைலாசநாதன் குடும்பத்தின் சார்பில் வழங்கப்பட்ட நிதிப் பங்களிப்பில் நடைபெற்றது.

அமரத்துவமடைந்த அமரர். சின்னப்பிள்ளை அவர்களுக்கு தாயக உறவுகளோடு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் ஆழ்ந்த இரங்கலோடு “அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டி” அஞ்சலி செலுத்துவதோடு

அமரர் அமரர். சின்னப்பிள்ளை அவர்களது பதினான்காம் ஆண்டு நினைவாக அனுஸ்டிக்கப்பட்டு, நிகழ்வுக்கு நிதிப் பங்களிப்பினை வழங்கிய அன்னாரின் அன்புமகன் குடும்பத்துக்கு பயனாளிகள் மற்றும் தாயக உறவுகளுடன் இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. -என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.
20.01 2024.

புங்குடுதீவு அமரர்.வி.அ.சின்னப்பிள்ளை அவர்களின் பதினான்காம் ஆண்டு நினைவாக உலருணவுப் பொதிகள் வழங்கல்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.