புங்குடுதீவு மண்ணின் மைந்தன் உயர்திரு இளங்கோவனின் வாழ்த்துச் செய்தி, பதாகைகளில் சில விபரங்கள்.. (படங்கள்)
புங்குடுதீவு மண்ணின் மைந்தன் உயர்திரு இளங்கோவனின் வாழ்த்துச் செய்தி, பதாகைகளில் சில விபரங்கள்.. (படங்கள்)
புங்குடுதீவு அம்பலவாணர் கலைப்பெருமன்றத்தின் ஏற்பாட்டில்
புங்குடுதீவு வாழ் மக்கள் மற்றும் உலகெங்கும் வாழும் உறவுகள் சார்பில் நடைபெற்ற புங்குடுதீவு அம்பலவாணர் கலைப்பெருமன்றத்தின் தலைவரும், வடமாகாண பிரதம செயலாளரும், பல்வேறு அரச சேவைகளின் செயலாளரும், சட்டத்தரணியுமான உயர்திரு இலட்சுமணன் இளங்கோவன் அவர்களின் மணிவிழா, அவரது சேவைநலன் பாராட்டு விழாவில் வழங்கப்பட்ட வாழ்த்துச் செய்திகள், வைக்கப்பட்ட்ட பதாகைகளை ஆகியவற்றில் எமது இணையத்துக்கு கிடைத்தவைகள் இவை..
புங்குடுதீவு அம்பலவாணர் கலைப்பெருமன்றத்தின் சார்பில் வழங்கி வைக்கப்பட்ட வாழ்த்துச் செய்தி, நினைவுப் பரிசில்..
புங்குடுதீவு அம்பலவாணர் கலைப்பெருமன்றத்தின் உப செயலாளர்களில் ஒருவரான திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்கள் தனது பெற்றோரான அமரர்கள் சொக்கலிங்கம் சீதேவிப்பிள்ளை பெயரில் அமரர் சொக்கலிங்கம் குடும்பம் சார்பில் வழங்கிய வாழ்த்துச் செய்தி, மற்றும் பதாகை..
வடஇலங்கை சர்வோதயம் சார்பில் அதன் அறங்காவலரான செல்வி பொ.ஜமுனாதேவி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்ட வாழ்த்துச் செய்தி..
புங்குடுதீவு ஸ்ரீ கணேசா மகாவித்தியாலயம் சார்பில் வழங்கப்பட்ட வாழ்த்துச் செய்தி..
கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் சார்பில், அதன் நடப்பாண்டு தலைவரான திரு.சசிகுமார் சண்முகநாதன் அவர்கள் அனுப்பி வைத்த வாழ்த்துச் செய்தி..
கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் நடப்பாண்டு செயலாளரான திரு.குணபாலசிங்கம் நாகதீபன் அவர்கள் வழங்கி வைத்த நினைவுப் பரிசில்..
புங்குடுதீவு தனியார் பேரூந்து சங்கம் சார்பில் வைக்கப்பட்ட பதாகை..
கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் நிர்வாகசபை உறுப்பினர்களில் ஒருவரான திரு.சோம சச்சிதானந்தன் அவர்கள் அனுப்பி வைத்த வாழ்த்துச் செய்தி..
மக்கள் சேவையே மான்புறு சேவையாய் கொண்டவரை வாழ்த்தி மகிழ்கிறோம்!
இறைவனின் படைப்புக்களோ ஆயிரமாயிரம் அந்த ஒவ் வொரு படைப்புக்களிலும் தம்மகிமையும் தம்ஆற்றலை திறமையையும் உணர்ந்து அதனை நல்லவழியில் ஏனையோரும் பயன்பெறும் வகையில் வாழ்ந்து்காட்டி தான் பெற்ற கல்விச்சிறப்பால் எல்லோருக்கும் உதவிட வேண்டுமென்ற உயர்ந்த எண்ணம் இவர் உள்ளத்தில் பிரவாகித்தது எனலாம்
சிறந்த தலைமைத்துவப் பண்புகள் கொண்டவராய் ஆற்றல் ஆளுமை நடுநிலைமை தவறாத பண்பு மனிதத்துவம் நிறைந்த செய்கைகள் நிர்வாகத்தில் அன்புடன் கூடிய கண்டிப்பு தன்மை அன்பும் அரவணைப்பும் நிறைந்து காணப்பட்ட சிறந்ததோர் நிர்வாகியாக எங்கள் மத்தியில் வலம்வந்த இளம்வயதிலேயே அரச உயர்பதவியை அலங்கரித்த எங்கள் புங்கைநகர் பெற்ற பேராளன் திரு. இலட்சுமணன் இளங்கோ அவர்கள் எங்கள் மத்தியில் இருந்து ஓய்வுபெற்று அகவை அறுபதில் மணிவிழாக் கண்டிடும் நாள் எம் உள்ளங்கள் மகிழ்வுறும் இன்பத்திருநாளே உள்ளம்நிறைந்து வாழ்த்தி் மகிழ்கிறோம்
அவரின் கீழ் கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு முன்னர் வேலணை உதவி அரசதிபர் பணிமனையில் கிராம சேவை அலுவலராக கடமை புரிந்த காலங்கள் என்னால் என்றும் மறக்க முடியாத பொற்காலங்களே மிகவும் நெருக்கடி மிகுந்த காலங்களில் எமது தீவக மக்கள் உடுத்த உடைகளோடு வெளியேறி பெரும் இடப்பெயர்வுகளை சந்தித்து அவதியுற்று தீவகத்தை விட்டு புலம் பெயர்ந்து வெளியேறி யாழ்நகரத்துக்கு் வெளியில்உள்ள பாடசாலைகளில் முகாம்களில் தங்கியிருந்து குழந்தைகள் பெரியவர்களோடு பல கஸ்டங்களை இடர்பாடுகளை எதிர்கொண்ட போதெல்லாம் போக்குவரத்து வசதிகள் இல்லாத நேரத்திலும் அவர்களிடம் சைக்கிள் மூலம் முகாம்களை நாடிச்சென்று அவர்களின் குறைபாடுகளை அறிந்து உடன் அரச மட்டங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுத்த காட்சிகளும் இவரது தன்னிகரற்ற சேவை அன்றே மேலோங்கியிருந்ததை ஒன்றாக நாமும் கூடவே சென்று என்னால் நேரில் கண்டு வியந்ததுண்டு
தனது கல்விச்சிறப்பால் ஆற்றல் ஆளுமைகளால் பல்வேறு உயர்பதவிகள் இவரை நாடிவந்திட கல்வித்திணைக்களத்தில் கல்விஅமைச்சின் கீழ் முக்கிய பதவி வகித்து அதன்மூலமும் ஆசிரியர் பற்றாக்குறைகள் பலவற்றுககும் தீர்வுகளும் பல கல்விக்கூடங்களின் பலகோடி பெறுமதியான பல் வேறு தேவைகளை பூர்த்தி செய்து கொடுத்த பெருமை இவரையே சாரும்
கிடைத்தற்கரிய மனிதப்பிறவியை எடுத்து வாழ்வில் என்ன சாதித்தோம் என நாம் எண்ணும் வேளை திரு. இளங்கோ அவர்கள் தமிழ் சமூகத்திற்கு ஆற்றிய அளவுடற்கரிய பணிகள் சேவைகளின் சிகரமாய்்மலைபோல் குவிந்து உயர்ந்து காட்சியளிப்பதே அவர் ஆற்றிய தொண்டின் மகிமை உணர்த்துகின்றது
எனவே மணிவிழா அகவையில் மேலும்பல விழாக்களை கண்டு என்றும் பரிபூரண உடல் உளநலத்துடன் அவர்தம் பணிகளை தொடர்ந்திட வேண்டுமென அன்புடன் இறையருளை வேண்டுகின்றேன்
தங்கள் கடன் பணிசெய்து கிடப்பதே
Soma Satchithanandan
Spiritual &Religious Care
Spiritual Cargiver Canada
புங்குடுதீவு பிரித்தானியா நலன்புரிச் சங்கம் சார்பில் வழங்கி வைக்கப்பட்ட வாழ்த்துச் செய்தி..
கனடாவில் இருந்து சிவஸ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் (ஐயாமணி) அவர்கள் வழங்கி வைத்த வாழ்த்துச் செய்தி..
VMV உதவிக்கரம் மற்றும் சுலக்ஷ்னா கல்வி நிலையம் அமைப்புக்கள் சார்பில் வழங்கி வைக்கப்பட்ட நினைவுப் பரிசில்..
கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் நிர்வாகசபை உறுப்பினர்களில் ஒருவரான திரு.பாலசிங்கம் ஸ்ரீநிகேதன் அவர்கள் அனுப்பி வைத்த பதாகை..
கனடாவில் இருந்து திரு.பாபு நாகேஷ் அவர்கள் அனுப்பி வைத்த வாழ்த்துச் செய்தி..
வாழ்த்துகிறேன்..
மண்ணின் மைந்தன் தம்பி இளங்கோவனே
பார் போற்றும் சிறந்த கல்விமானே
பல உயர்பதவிகள் வகித்தவனே
பாரபட்சம் பாராது தராசுபோல்
நடுநிலையானவனே
உனதன்பும், பண்பும்,
செயல்பாடுகளும் தான் இன்று
உன்னை பெரியவனாய் பார்க்கிறது.
விளையும் பயிரை முளையிலே
தெரியும் என்பார்கள்
அதுபோல் நீ சின்ன வகுப்பு
படிக்கும் போதே வெளியிலே வரமாட்டாய்
ஒரே படிப்பு படிப்பு படிப்பு
அது இப்போது தான்
தெரிகிறது உனது மதிப்பு.
கற்றவனுக்கு சென்ற
இடமெல்லாம் மதிப்பு
அதனால் தான் பாரில்
உனக்கு வருகிறது மதிப்பு.
முற்பத்திநான்கு வருடங்கள்
உயர்பதவிகள் வகித்தாய் ஆனால்
உனக்கு வந்ததில்லை செருக்கு.
நற்குணமும், சாந்தமும் தான்
உன்னை தலைநிமிர செய்தது
உனது மணிவிழாவும், சேவையைபாராட்டி சேவைநலன்விழாவும் இனிதேநடைபெற எனது வாழ்த்துகள் தம்பி இளங்கோ.
வாழ்க வளமுடன் வாழிய நூறு!
அன்புடன் வாழ்த்தி வணங்கும் அண்ணன்
-பாபு நாகேசு.
கனடா.
புங்குடுதீவு வல்லன் அலைகண்டி பிள்ளையார் தேவஸ்தானம் சார்பில் வைக்கப்பட்ட பதாகை..
புங்குடுதீவு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை சார்பில் வழங்கி வைக்கப்பட்ட வாழ்த்துச் செய்தி..
சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சார்பில் வழங்கி வைக்கப்பட்ட வாழ்த்துச் செய்தி..
புங்குடுதீவு வல்லன் ஈஸ்ரன் விளையாட்டுக் கழகம் சார்பில் வைக்கப்பட்ட பதாகை..
புங்குடுதீவு சூழகம் (சூழலியல் மேம்பாட்டு அமைவனம்) அமைப்பின் சார்பில் வழங்கி வைக்கப்பட்ட வாழ்த்துச் செய்தி..
திரு.செல்வரெட்ணம் சுரேஷ் (சுவிஸ்) அவர்கள் வழங்கி வைத்த வாழ்த்துச் செய்தி..
லண்டன் திரு.வசந்தன் அவர்கள் வழங்கி வைத்த வாழ்த்துச் செய்தி..
அத்துடன் மேற்படி நிகழ்வு சிறப்புற செயல்பட்ட பேராசிரியர் திரு.குகபாலன், முன்னாள் அதிபர் திரு.எஸ்.கே.சண்முகலிங்கம், சர்வோதய அறங்காவலர் செல்வி.பொ.யமுனாதேவி ஆகியோருடன், மேற்படி நிகழ்வு சிறப்புற நிதி உதவி வழங்கிய கனடாவில் இருந்து திரு.பொன் சுந்தரலிங்கம், திரு.தம்பிப்பிள்ளை இரத்தினராசா, திரு.செல்லத்துரை சபாரெத்தினம், கனடா சங்க பொருளாளர் திரு.கோபாலபிள்ளை தீபன், கனடா சங்க நிர்வாக உறுப்பினர்கள் திரு.பாலசிங்கம் ஸ்ரீநிகேதன், திரு.ஆறுமுகம் கிருபா (சமூகம் மீடியா) மற்றும் சுவிஸிலிருந்து திரு.இராசமாணிக்கம் இரவீந்திரன், திரு.சொக்கலிங்கம் ரஞ்சன்.. ஆகியோருக்கும்,
குறிப்பாக மண்ணின் மைந்தன் திரு.இளங்கோவன் அவர்களின் மைத்துனனும், புங்குடுதீவு கனடா சங்க செயலாளருமான TRM தீபன் எனும் திரு.குணபாலசிங்கம் தீபன் அவர்களுக்கும் மிகப்பெரிய நன்றி.,
-புங்குடுதீவு அம்பலவாணர் கலைப்பெருமன்றம்-