;
Athirady Tamil News

69 குடும்பங்களைச் சேர்ந்த 247 பேர் பாதிப்பு !!

0

யாழ். மாவட்டத்தில் 69 குடும்பங்களைச் சேர்ந்த 247 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் என். சூரியராஜ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 2 நாளாக மழையுடன் கூடிய காலநிலை காணப்படுவதுடன் குறித்த மழையுடன் கூடிய நிலையில் தாக்கத்தினால் யாழ்ப்பாண மாவட்டத்தின் ஊர்காவற்துறை, தெல்லிப்பளை, சங்கானை சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 69 குடும்பங்களைச் சேர்ந்த 247 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது

பாதிக்கப்பட்டோரின் விவரங்கள் அந்தந்த பிரதேச செயலர் ஊடாக பெறப்பட்டு அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.