;
Athirady Tamil News

காங்கோவில் எபோலா தொற்று உயிரிழப்புகள் 1,300-ஐ கடந்தது!

0

ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் வேகமாக பரவி வரும் எபோலா நோய்த் தொற்றுக்கு இதுவரை 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனா்.

கடந்த மே 15 தொடங்கிய இந்த நோய்ப் பரவலில், மொத்தம் 2,973 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது பரவி வரும் ‘புண்டிபுக்யோ’ வகை எபோலா தீநுண்மிக்கு அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைகள் ஏதுமில்லை என்பதால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகக் குறுகிய காலத்தில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

நோய்த்தொற்று தொடங்கியதிலிருந்து 100-க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

காங்கோ சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, எபோலா பாதிக்கப்பட்ட மொத்தம் 766 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரத்தில் இதுவரை 540 பேர் குணமடைந்துள்ளனர்.

உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளில் கிட்டத்தட்ட 90 சதவீதம் இத்துரி கிழக்கு மாகாணத்திலேயே பதிவாகியுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.