;
Athirady Tamil News

மேற்கு வங்காளத்தில் வங்காளதேச பயங்கரவாதி கைது – போலி வாக்காளர், ஆதார் அட்டை பறிமுதல்…!!

0

மேற்கு வங்காள மாநிலம், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் சுபாஸ்கிராம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சிலர் இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் அந்த இடத்திற்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வங்காள தேசத்தைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவனை அதிகாரிகள் கைது செய்தனர்.

அவன் வங்காளதேசத்தில் உள்ள ஜமாத்-உல்- முஜாகிதின் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவன் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவனிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வங்காளதேச பயங்கரவாதியிடமிருந்து போலி வாக்காளர் அட்டையும், ஆதார் அட்டையும் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பிடிபட்ட வங்காள தேச பயங்கரவாதியிடம் இருந்து போலி வாக்காளர் மற்றும் ஆதார் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அவன் இந்தியாவுக்குள் எப்படி? எப்போது? நுழைந்தான் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.

பயங்கரவாத அமைப்புடன் அவனுக்கு உள்ள தொடர்பு குறித்த பல ஆவணங்களை நாங்கள் கைப்பற்றி உள்ளோம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.