;
Athirady Tamil News

பிரதமர் மோடி நாளை கேதார்நாத் செல்கிறார்…!!

0

பிரதமர் மோடி கடந்த மாதம் இறுதியில் ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இத்தாலி தலைநகர் ரோம் நகருக்கு சென்றிருந்தார். அதன்பின் கிளாஸ்கோவில் நடைபெற்ற பருவநிலை மாற்ற மாநாட்டில் கலந்து கொண்டார். இந்தியா திரும்பிய பிரதமர் மோடி, இன்று ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.

இந்த நிலையில் நாளை உத்தரகாண்ட் மாநிலம் செல்கிறார். காலை கேதார்நாத் கோவில் செல்லும் பிரதமர் மோடி, சாமி தரிசனம் செய்கிறார். பின்னர், ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் சமாதி ஸ்தலத்தை திறந்து வைக்கிறார். அதன்பின் நடைபெற்று வரும் நலத்திட்டங்களுக்கான கட்டுமான பணிகளை ஆய்வு செய்கிறார். பின், உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைப்பதுடன் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.