;
Athirady Tamil News

மெக்சிகோவில் கோர விபத்து: அடுத்தடுத்து வாகனங்கள் மோதி 19 பேர் பலி…!!

0

மத்திய மெக்சிகோ, சால்கோ நகராட்சி அருகே உள்ள நெடுஞ்சாலையில் சரக்கு லாரி ஒன்று பிரேக் பிடிக்காமல் போனதால், எதிரே சென்ற மற்ற வாகனங்கள் மீது மோதியது. இதில், பின்புறம் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்தை ஏற்படுத்தியது. இந்த கோர விபத்தில் சிக்கி சரக்கு லாரி ஓட்டுனர் உள்பட 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், படுகாயம் அடைந்த மூன்று பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த விபத்தில், சில வாகனங்களில் தீப்பிடித்து எரிந்தது. இதனால், வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.