;
Athirady Tamil News

மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த 3 பவுன் நகை- பணம் திருட்டு…!!

0

தஞ்சை அருகே உள்ள பூண்டியை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 37). இவர் அடகு கடை வைத்துள்ளார். இந்த நிலையில் கும்பகோணத்தில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து 3 பவுன் அடகு நகையை எடுத்துக்கொண்டு ஒரு துணிப்பையில் ரூ.32 ஆயிரத்து 714 வைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தஞ்சைக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது தஞ்சை தெற்கு பிரதான சாலையில் உள்ள ஒரு டீக்கடை முன்பு தனது முகத்தை கழுவுவதற்காக வண்டியில் பணம் மற்றும் நகையை வைத்து விட்டு சென்றுள்ளார். முகத்தை கழுவி விட்டு வந்து பார்த்த போது வண்டியில் வைத்திருந்த பணம்-நகை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். நகையை அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து முருகானந்தம் தஞ்சை மேற்கு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனியாண்டி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.