;
Athirady Tamil News

ஆன்லைன் வகுப்பின்போது செல்போன் வெடித்து சிறுவன் காயம்…!!

0

மத்தியப் பிரதேசம் சத்னா மாவட்டத்தின் தலைமையகத்தில் இருந்து 35 கி.மீ தொலைவில் உள்ளது சந்த்குய்யா கிராமம். இந்த பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் ராம்பிரகாஷ் பதவுரியா 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

ராம்பிரகாஷ்க்கு நேற்று வழக்கம்போல் ஆன்லைன் வகுப்பு நடைபெற்றது. அப்போது வீட்டில் யாரும் இல்லை என்று தெரிகிறது. இந்நிலையில், ராம்பிரகாஷ் செல்போனில் ஆன்லைன் வகுப்பை கவனித்துக் கொண்டு இருந்தபோது திடீரென செல்போன் வெடித்துள்ளது.

அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ராம்பிரகாஷை மீட்டு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக அங்கிருந்து ஜபால்பூர் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், செல்போன் வெடித்ததில் மாணவரின் தாடையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.