;
Athirady Tamil News

வாள்வெட்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 26 வயதான நபரை பொலிஸார் கைது!!

0

யாழ்.ஊர்காவற்றுறை – நாரந்தனை பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்து வாள்வெட்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 26 வயதான நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த செப்ரெம்பர் மாதம் 23ம் திகதி நாரந்தனை பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து, இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், தாக்குதலாளி தலைமறைவாகி இருந்தார்.

அந்நிலையில் , கடந்த 3 மாதங்களாக தலைமறைவாக இருந்த நிலையில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

கைது செய்யப்பட்டவரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.