;
Athirady Tamil News

எரிபொருள் விலை அதிகரிப்பை உடனடியாக இடைநிறுத்த கோரிக்கை!!

0

எரிபொருள் விலை அதிகரிப்பை அரசாங்கம் உடனடியாக இடைநிறுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.

எரிபொருள் விலையை மீண்டும் அதிகரிப்பதன் மூலம் மக்களை மீண்டும் சங்கடத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இரவில் மக்கள் தூங்கும் போது உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதும் பொருட்களின் விலைகளை அதிகரிப்பதும் அரசாங்கத்தின் சமீபத்திய கொள்கை என அவர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தமது ஆட்சியில் தீர்வு வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.