;
Athirady Tamil News

கௌதாரி முனைக்குச் சென்றவர்கள் மோதிக் கொண்டதில் ஒருவர் பலி!!

0

யாழ்ப்பாணத்திலிருந்து வாகனத்திலும் படகிலும் கிளிநொச்சியின் கௌதாரி முனைக்குச் சென்றவர்கள் மோதிக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

ஆனைக்கோட்டையிலிருந்து வாகனம் ஒன்றில் இளைஞர்கள் கௌதாரி முனைக்குச் சென்றுள்ளனர்.

அவர்கள் அங்கு விருந்தில் பங்கேற்றிருப்பதாக தெரியவருகிறது.

இதேவேளை மற்றொரு தரப்பினரும் காரைநகரிலிருந்து படகில் அதே பகுதிக்குச் சென்று அவர்களும் அங்கு விருந்தில் பங்கேற்றிருக்கின்றனர்.

இரு தரப்புக்கும் இடையில் தொடக்கத்தில் ஏற்பட்ட கருத்து மோதல் வன்முறையாக மாறியதால் ஒருவர் படுகாயம் அடைந்திருப்பதாக தெரியவருகிறது.

படுகாயம் அடைந்தவர் ஆனைக்கோட்டையைச் சேர்ந்தவர் என்றும் அவர் உடனடியாக பூநகரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்பட்டபோதிலும் அவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் ஆனைக்கோட்டை சோமசுந்தரம் வீதியைச் சேர்ந்த நிறஞ்சன் நிரோஷன் (வயது 22) என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகின்றது.

இதேவேளை,

இரண்டுதரப்பினைச் சேர்ந்தவர்களையும் கைது செய்ய பூநகரி பொலிஸார் நடவடிக்கையெடுத்திருப்பதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.