;
Athirady Tamil News

கண் சத்திரசிகிச்சை பிரிவின் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தம்!!

0

யாழ்.போதனா வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை பிரிவின் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகப் பதில் பணிப்பாளர் மு.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

கண் சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்பட்டமை தொடர்பாகக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் மருந்துகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது

அதனடிப்படையில் கண் சத்திரசிகிச்சைக்கு தேவையான மருந்துகள் இல்லாமையினால் அந்த பிரிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் சில மருந்துப் பொருட்கள் குறைந்தளவிலேயே உள்ளது.

ஆகையினால் மருந்துப்பொருட்களை பெற்றுக் கொள்வதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.