;
Athirady Tamil News

விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு !!

0

ஏப்ரல் 4ஆம் திகதி முதல் மாணவர்கள் பாடசாலைக்கு வர வேண்டுமா இல்லையா என்பதை பாடசாலை அதிபர்களே முடிவு செய்யலாம் என கல்வி அமைச்சு கூறுகிறது.

அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் தலைமையாசிரியர்கள் ஏப்ரல் 4 – 8 ஆம் திகதி வரை பரீட்சைகள் இடம்பெறுவதால் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பது தொடர்பில் அதிபர்கள் தீர்மானிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட மின்வெட்டு காரணமாக ஏப்ரல் 04ஆம் திகதி திங்கட்கிழமை முதல் பாடசாலை விடுமுறையை பிரகடனப்படுத்துமாறு கல்வி அமைச்சுக்கு இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு பரிந்துரைத்திருந்தது.

எனினும், ஏப்ரல் 9 – 17 வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.