;
Athirady Tamil News

யாழில். மைத்துனியை வன்புணர்ந்த அத்தான் – மயக்க மருந்து கொடுத்து நண்பனையும் வன்புணர அனுமதி!!

0

யாழில் தனது மைத்துனியான சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதுடன் , சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து தனது நண்பனையும் வன்புணர்வு புரிய அனுமதித்த குற்றத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தனது மனைவியின் தங்கையான சிறுமியான மைத்துனியை குறித்த நபர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்துள்ளார். அந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் , சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து , சிறுமி மயங்கிய நிலையில் , தனது நண்பன் ஒருவரையும் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்த அனுமதித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் அப்பகுதி சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரிகள் கண்டறிந்ததை அடுத்து , அவர்களால் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

அதனை அடுத்து பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து விசாரணைகளுக்கு உட்படுத்திய பின்னர் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை ,சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து வன்புணர்ந்த குறித்த நபரின் நண்பர் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில் , அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.