;
Athirady Tamil News

சிறைக்கைதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பம்!!

0

புத்தாண்டை முன்னிட்டு சிறைக்கைதிகளை பார்ப்பதற்கு உறவினர்களுக்கு ஐந்து நாட்கள் சந்தர்ப்பம் வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இன்று (12) முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை இந்த விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

ஒரு கைதிக்கு தனது உறவினர்கள் மூன்று பேரை சந்திக்க வாய்ப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைதியின் உறவினர்கள் ஒரு கைதிக்கு மாத்திரம் வீட்டில் இருந்து உணவு மற்றும் இனிப்புகளை வழங்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.