;
Athirady Tamil News

ஆணொருவரின் சடலம் ஒன்று மீட்பு!!

0

திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்பே மீன்பிடி துறைமுகத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் மரணித்த ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் அம்பலாங்கொடை, பின்னதூவ பகுதியைச் சேர்ந்த மல்நெய்து மானவடுகே சமிந்த பிரியந்த (35) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றைய தினம் (15) மீட்கப்பட்ட இச்சடலம் தொடர்பான சம்பவம் குறித்து தெரிய வருவதாவது:

காலி பிரதேசத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைக்காக IMULA 2190 என்ற படகின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டவரே இவ்வாறு உயிரிழந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் நீதவானின் மரணப் பரிசோதனையின் பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சீனக்குடா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.