;
Athirady Tamil News

இந்தியாவில் வறுமையை ஒழிக்க… கெளதம் அதானி கொடுத்த ஐடியா..!!

0

இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி விமான நிலையம், துறைமுகம், மின்சார தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். அவர் இந்தியா 2050-ம் ஆண்டுக்குள் 30 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைந்துவிட்டால் நமது நாட்டில் யாரும் வெறும் வயிற்றுடன் படுக்கைக்கு செல்ல மாட்டார்கள் என கூறியுள்ளார். இதுகுறித்து அதானி கூறியதாவது:-

இந்தியா 2050-ஐ நெருங்குவதற்கு இன்னும் 10 ஆயிரம் நாட்கள் இருக்கிறது. இந்த நாட்களில் நாம் கூடுதலாக 25 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய வேண்டும். அதாவது தினம் 2.5 பில்லியன் டாலர் ஜிடிபியை இந்தியா அடைய வேண்டும். இந்த நாட்களில் இந்தியாவின் வறுமை முழுமையாக ஒழிந்துவிடும்.

இந்த பொருளாதாரத்தை அடைவது குறுகிய காலத்தில் பெரிய இலக்காக தோன்றலாம். ஆனால் மாரத்தான் போல விடாமல் ஓடி இந்த இலக்கை அடைந்துவிடலாம்.

இவ்வாறு அதானி கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.