;
Athirady Tamil News

முள்ளிவாய்க்கால் ஏற்பாட்டுக் குழுவானது மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் ஈடுபட வேண்டும்!! (வீடியோ)

0

முள்ளிவாய்க்கால் ஏற்பாட்டுக் குழுவானது இனி வரும் காலங்களில் மக்கள் எழுச்சி இயக்கமாக மாற்றப்பட்டு மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் தொடர்ச்சியாக ஈடுபட வேண்டும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாவதி ஆனந்தநடராஜா தெரிவித்தார்.

இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டிப்பது தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் கூட்டமொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அழைப்பை ஏற்று நாம் அங்கு சென்றிருந்தோம். அந்தக் கூட்டம் சுமுகமாகவே நடைபெற்றது. அவ்வாறு இருந்தும் கூட தவறான செய்திகள் பரப்பபட்டன.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நினைவு கூறுவதில் மட்டுமே ஈடுபடுகின்றனர். முள்ளிவாய்க்கால் ஏற்பாட்டுக் குழுவானது இனி வரும் காலங்களில் மக்கள் எழுச்சி இயக்கமாக மாற்றப்பட்டு மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் தொடர்ச்சியாக ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் எமக்குள் இருந்தது. அந்த வகையில் இந்த கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது.

ஆனாலும் அந்த கூட்டத்தில் ஒரு சில கருத்து வேறுபாடுகள் கூட்டத்தில் இடம்பெற்றாலும் கூட அவை வேறுவிதமாக சித்தரிக்கப்பட்டன. கூட்டத்தில் பங்கு கொண்ட ஒரு சிலரிடையே இடம் பெற்ற தனிப்பட்ட முரண்பாடு காரணமாக சில வாக்குவாதங்கள் இடம்பெற்றது

ஊடகங்களில் வெளியான அனைத்து செய்திகளும் பொய்யானவையே என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

பிரதமரை பதவி விலகுமாறு: ஜனாதிபதிக்கு டலஸ் கடிதம் !!

ஊடகத்துறை அமைச்சர் இராஜினாமா !!

துப்பாக்கி சூடு நடத்துமாறு அறிவுறுத்தவில்லை: ஐ.ஜி.பி !!

கால எல்லையை நீடித்தது இந்தியா!!

இலங்கைக்கான நாணய பரிமாற்று காலம் நீடிப்பு!!

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பொலிஸ்மா அதிபர் !!

இலங்கை இந்தியா வசமாகுமா?

சபாநாயகர் விசேட அறிவிப்பு!!

தனது சொத்துக்கள் தொடர்பில் நாமல் விசேட அறிவிப்பு!!

இன்னும் 6 மாதங்கள் செல்லலாம்!!!

பொதுமக்களிடம் வீதி மறியல்களை ஏற்படுத்த வேண்டாம்!!!

“கோட்டா கோ ஹோம்” உடனடியாக நிறுத்தவும் !!

மஹிந்தவை அசைக்க முடியாத யோசனை நிறைவேற்றம் !!

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் கறுப்பு, வெள்ளை கொடிகள் !!

நான் பதவி விலகுவேன்: சஜித் !!

21/4 தாக்குதல்: சபையில் ஒருநிமிடம் அஞ்சலி !!

கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று!!

13 ஆளும் எம்.பிக்கள் ஜனாதிபதிக்கு கடிதம் !!

இராகலை நகரை டயர் புகை சூழ்ந்தது !!

அதிகபட்ச படைகளை பயன்படுத்தி இருப்பின் என்ன நேர்ந்திருக்கும்?

“ஒருவரை கொன்றதால் 300 பேர் தப்பினராம்” !!

“ஜனாதிபதி பதவி விலகத்தயார்” !!

“பொலிஸ் தீ மூட்டியதாக சொல்கின்றனர்” நாமல் !!

“இது ராஜபக்‌ஷர்களின் நாடு அல்ல” !!

திருகோணமலையில் உக்கிரமடையும் ஆர்ப்பாட்டங்கள் !!

எரிபொருள் பௌசர் தொடர்பில் பொலிஸாரின் கோரிக்கை !!

இலங்கைக்கான ஐ.நா வதிவிட பிரதிநிதி வௌியிட்டுள்ள அறிக்கை!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.