;
Athirady Tamil News

24 பள்ளி மாணவிகளை மாடியில் பூட்டிவைத்த ஆசிரியர்கள்- உ.பியில் பரபரப்பு..

0

உத்தரப்பிரதேசம் லக்கிம்பூர் பெக்ஜம் பகுதியில் கஸ்தூரிபா பல்லிக்கா வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் மனோரமா மிஸ்ரா மற்றும் கோல்டி கதியார் என்ற இரண்டு ஆசிரியர்களுக்கு பணியிடை மாற்றம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த இரண்டு ஆசிரியர்களும் சேர்ந்து அப்பள்ளியில் இருந்த 24 மாணவிகளை மாடியில் அடைத்து வைத்துள்ளனர். தங்களது பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்தை மிரட்டுவதற்காக இவ்வாறு அவர்கள் செய்ததாக கூறப்படுகிறது.

அதன்பின் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட நிர்வாக அதிகாரிகளும், போலீசாரும் மாணவிகளை மீட்டு அவர்களுடைய விடுதிக்கு அழைத்துச் என்றனர்.

இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.