;
Athirady Tamil News

’வட மாகாண மக்களே முன்னுதாரணம் ’ !!

0

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடி காலகட்டத்தில் விவசாய உற்பத்தியில் வடக்கு மாகாண மக்கள் முன்னுதாரணமாக இருப்பதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர சபையில் தெரிவிததார்.

பாராளுமன்றத்தில் நேற்று (9) தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. யான செல்வம் அடைக்கலநாதன் , விவசாயிகளுக்கு உடனடியாகவும், குறைந்த விலையிலும் உரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தால் மக்களை பட்டினியில் இருந்து காப்பாற்ற முடியும் .எமது விவசாயிகள் பயிர்செய்கைகளை செய்வதற்கு மிக ஆர்வத்துடன் இருக்கின்றனர். ஆனால் 40 ஆயிரம் ரூபாவுக்கு அவர்கள் உரத்தை வாங்க வேண்டியுள்ளது.

இந்தியா உரம் வழங்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இதனை துரிதமாக வழங்கினால் பட்டினிகளில் இருந்து மக்களை காப்பாற்ற முடியும். அதேபோன்று குறைந்த விலையில் அவற்றை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமர வீரவிடம் கோரினார்.

இதற்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பதிலளிக்கையிலேயே, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடி கால கட்டத்தில் விவசாய உற்பத்தியில் வடக்கு மாகாண மக்கள் முன்னுதாரணமாக உள்ளனர். அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் அதிகளவான விவசாய நிலங்களில் விவசாய செய்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.