தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் விசேட நடவடிக்கை !!
நாட்டின் அரச கடன்கள் தொடர்பான விசேட கணக்காய்வொன்றை தேசிய கணக்காய்வு அலுவலகம் ஆரம்பித்துள்ளது.
2019 மற்றும் 2021-க்கு இடைப்பட்ட 3 வருட காலப்பகுதியில் பெறப்பட்ட அரச கடன்கள் தொடர்பில் இந்த விசேட கணக்காய்வில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் சுலந்த விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த விசேட கணக்காய்வு அறிக்கையை அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் கணக்காய்வாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.