;
Athirady Tamil News

சூரத்தில் இன்று இயற்கை விவசாய மாநாடு- பிரதமர் மோடி உரையாற்றுகிறார்..!!

0

நாட்டின் 75வது சுதந்திர கொண்டாட்ட பெருவிழாவின் ஒரு பகுதியாக, கடந்த மார்ச் மாதம் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து மகா சம்மேளனத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரையில், நாடு முழுவதும் ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது 75 விவசாயிகளாவது இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். இதன் அடிப்படையில் சூரத் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் குழுக்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், விவசாய உற்பத்தி சந்தைக் குழுக்கள் , கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள் போன்ற பல்வேறு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொண்டது. இதன் விளைவாக, ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் குறைந்தது 75 விவசாயிகள் அடையாளம் காணப்பட்டு, இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள பயிற்சியும் அளிக்கப்பட்டது. இவ்வாறு, மாவட்டம் முழுவதும் 41,000 க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிலையில் சூரத்தில் இன்று இயற்கை விவசாயிகள் பங்கேற்கும் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இயற்கை விவசாயத்தை ஏற்றுக்கொண்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் அதுதொடர்பான அனைத்து பிரதிநிதிகளின் இதில் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் குஜராத் ஆளுநர் மற்றும் அம்மாநில முதலமைச்சர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் இன்று காலை காலை 11.30 மணிக்கு பிரதமர் மோடி காணொலி மூலம் உரையாற்றுகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.