;
Athirady Tamil News

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு !!

0

கொட்டாஞ்சேனையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹின்னி அப்புஹாமி சந்தியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியினர் மீதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், கணவரான கிம்புலா எல பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவரே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்ட இடத்திலிருந்து இரண்டு வெற்றுத் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

துப்பாக்கிச் சூடு மேற்கொண்டவர்கள் எப்படி வந்தார்கள் என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை என்றும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.