;
Athirady Tamil News

வவுனியாவில் இரு உயிர்களைக்காவுகொண்ட பாதுகாப்பற்ற புகையிதைக்கடவைக்கு பாதுகாப்பு கடவை அமைப்பு!! (படங்கள்)

0

வவுனியா செட்டிகுளம் துடரிகுளம் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரதக்கடவைக்கு பாதுகாப்புக்கடவை அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு திறந்துவைக்கப்பட்டுள்ளது .

வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபையினால் இறம்பைக்குளம் ஈஷி மிஷனிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக பாதுகாப்புக் கடவை அமைக்கப்பட்டுள்ளது.

துடரிகுளம் பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையை கடக்க முற்பட்ட போது இருவரின் உயிர் காவுகொள்ளப்பட்டுள்ளது . இந்நிலையில் அப்பகுதிக்கு பாதுகாப்பான புகையிரதக்கடவை அமைத்து தருமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் அண்மையில் மேற்கொண்டனர் .

இந்நிலையில் இன்றைய தினம் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் சந்தன அழகக்கோனினால் பாதுகாப்பான புகையிரதக்கடவை அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு திறந்துவைக்கப்பட்டுள்ளது .

இந்நிகழ்வில் இறம்பைக்குளம் ஈஷி மிஷன் இயக்குநர் , வெங்கலச்செட்டிகுளம் பிரதேசபை தலைவர் . செட்டிகுளம் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி , செட்டிகுளம் மேலதிக பிரதேச செலயாளர் , கிராம அலுவலகர் , சர்வமதத்தலைவர்கள் . பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர் .

You might also like

Leave A Reply

Your email address will not be published.