;
Athirady Tamil News

கள்ளக்குறிச்சி மாணவியின் மறு பிரேத பரிசோதனைக்கு தடை விதிக்க முடியாது- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு..!!

0

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் மாணவி ஸ்ரீமதி பள்ளி மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நேற்று ஐகோர்ட்டு சில உத்தரவுகளை பிறப்பித்து இருந்தது. மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய அறிவுறுத்தியதுடன் தனியாக டாக்டர் குழுவை நியமிக்க அறிவுறுத்தி இருந்தது. அப்போது மாணவியின் தந்தை தரப்பில் தங்கள் தரப்பில் டாக்டர் ஒருவரையும் பிரேத பரிசோதனையில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஐகோர்ட்டு ஏற்க மறுத்த நிலையில் மாணவியின் தந்தை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தங்கள் தரப்பு கோரிக்கை ஐகோர்ட்டில் ஏற்கப்படாததால் மாணவியின் பிரேத பரிசோதனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று மாணவியின் தந்தை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு பிரேத பரிசோதனைக்கு தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டது. வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.