;
Athirady Tamil News

நாளைய மின்வெட்டு விவரம் வெளியானது !!!

0

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளை (21) மூன்று மணி நேர மின்வெட்டுக்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

ஏ முதல் டபிள்யூ வரையான 20 வலயங்களில் பகலில் 1 மணி நேரம் 40 நிமிடங்களும் இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிசி பிரிவில் காலை 6 மணி முதல் 8.30 மணி வரை 2 மணி 30 நிமிடங்களும் எம்,என்,ஓ,எக்ஸ், வை, இஸட் பிரிவுகளில் காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை 3 மணி நேர மின்வெட்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.