நாட்டின் பல பகுதிகளுக்கு மின்னல் எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் இன்று (03) மின்னல் தாக்கம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இந்த எச்சரிக்கையானது இன்று இரவு 11.30 மணிவரையில் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.