;
Athirady Tamil News

கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற ஜோடி கைது !!

0

கல்கிஸையில் கொலை ஒன்றை செய்து விட்டு, நாட்டிலிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த இளைஞனும் யுவதி ஒருவரும் நேற்று (30) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

31 வயது இளைஞனும் 19 வயது யுவதி ஒருவருமே டுபாய்க்கு தப்பிச் செல்ல முற்பட்ட போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் இந்த மாதம் 27ஆம் திகதி கல்கிஸ்ஸ பகுதியில் வைத்து நபர் ஒருவரை கொலை செய்திருக்கின்றமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதுடன், அது தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், இருவரும் விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரையும் கல்கிஸ்ஸ பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.