;
Athirady Tamil News

இலங்கை கல்விசாரா ஊழியர் ஒன்றிணைந்த சங்கத்தின் சம்மாந்துறை வலய இணைப்பாளர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கல்

0

சம்மாந்துறை கல்வி வலயத்திற்கான இலங்கை கல்விசாரா ஊழியர் ஒன்றிணைந்த சங்கத்தின் கல்விசாரா உத்தியோகத்தர்களின் கூட்டம் இன்று (29) அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் வித்தியாலயம் (தேசிய பாடசாலை) வளாகத்தில் நடைபெற்றது.


இக்கூட்டத்தின் போது, சம்மாந்துறை கல்வி வலயத்திற்கான வலய இணைப்பாளர்களாக எம்.எம். பௌசான் மற்றும் ஏ.எல்.எம். அஷ்ரப் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அதற்கான நியமனக் கடிதங்களை சங்கத்தின் உப செயலாளர் ஏ.எம். ஜெமில் வழங்கி வைத்தார்.


இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட இலங்கை கல்விசாரா ஊழியர் ஒன்றிணைந்த சங்கத்தின் செயலாளர் எம்.ஜே.எம். சஜீத் மற்றும் சம்மாந்துறை கல்வி வலயத்தைச் சேர்ந்த பல கல்விசாரா உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.


இக்கூட்டத்தில் சங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள், கல்விசாரா உத்தியோகத்தர்களின் நலன்கள் மற்றும் அமைப்பின் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.