;
Athirady Tamil News

வவுனியாவில் கறுப்பு சந்தையில் எரிபொருள் விற்பனை; இளைஞர் ஒருவர் கைது!!

0

வவுனியாவில் கறுப்பு சந்தையில் பெட்ரோல் எரிபொருளை விற்பனை செய்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 21 லீற்றர் பெட்ரோலினை பிறிதொரு நபருக்கு 1000 ரூபாய் படி விற்பனை செய்த நிலையில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞரிடமிருந்து 21 லீற்றர் பெட்ரோல் மீட்கப்பட்ட நிலையில்,பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சந்தேகநபரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.