;
Athirady Tamil News

பாகிஸ்தான் கப்பலுடன் போர் பயிற்சி இல்லை: இலங்கை கடற்படை!!

0

இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் (பி.என்.எஸ்) தைமூருடன் இணைந்து இலங்கையின் கடற்படையினர் போர் பயிற்சிகளை நடத்தவுள்ளனர் என்ற செய்தியை இலங்கை கடற்படை மறுத்துள்ளது.

கடந்த 12 ஆம் திகதியன்று கொழும்பு துறைமுகத்துக்கு வந்த குறித்த கப்பல் நாளை (15) இலங்கையில் இருந்து புறப்படவுள்ளது.

இந்தநிலையில் கொழும்புக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் இந்த கப்பலுடன், இலங்கையின் கடற்படையினர் போர் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளதாக சில ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் பொய்யானவை என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளும் வெளிநாட்டு கடற்படை கப்பல்கள், நாட்டில் இருந்து வெளியேறும் போது இலங்கை கடற்படையுடன் கூட்டு பயிற்சிகளில் ஈடுபடுவது வழமையானது விடயமாகும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்ப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.