;
Athirady Tamil News

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 3-வது இடத்துக்கு சரிந்தார் கவுதம் அதானி..!!

0

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் கடந்த வாரம் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி 2-வது இடத்துக்கு முன்னேறினார். இதன் மூலம் உலகின் ‘டாப்10’ பணக்காரர்கள் பட்டியலில் எலொன் மஸ்க்கிற்கு அடுத்தப்படியாக கவுதம் அதானி இருந்து வந்தார். இந்த நிலையில் உலக பணக்காரர்கள் பட்டியலில் தற்போது அதானி பின்னடைவை சந்தித்து உள்ளார்.

புளூம்பெர்க் பில்லியனர் குறியீட்டின்படி கவுதம் அதானி 135 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளார். இந்திய பங்கு சந்தை சரிவால் அவரது சொத்து மதிப்பு குறைந்தது. அதானியின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.10.98 லட்சம் கோடியாகும். ஜெப்பெசோஸ் 138 பில்லியன் டாலர் (ரூ.11.23 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் மீண்டும் 2-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். அதே நேரத்தில் எலொன் மஸ்க் 245 பில்லியன் டாலர் சொத்துடன் தொடர்ந்து உலக பெரும் பணக்காரரகளில் முதல் இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 20 லட்சம் கோடியாகும்.

ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 6.70 லட்சம் கோடியாகும். அவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் 11-வது இடத்தில் உள்ளார். உலக கோடீஸ்வர்கள் பட்டியலில் முன்னிலை பெற அதானி, பெசோஸ் மற்றும் பெர்னார்ட் அர்னால்ட் ஆகியோர் இடையே சமீப காலமாக கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த ஆண்டு பிப்ரவரியில் முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி ஆசியாவின் மிக பெரிய பணக்காரராக கவுதம் அதானி உருவெடுத்தார்.

அதைத் தொடர்ந்து ஜூலை மாதம் அதானி மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் பில்கேட்சை முந்தி உலகின் 4-வது பணக்காரர் ஆனார். கடந்த ஆகஸ்ட் 30 அன்று பிரெஞ்சு தொழில் அதிபர் பெர்னார்ட் அர்னால்டை பின்னுக்கு தள்ளி 3-வது பெரிய பணக்காரராக மாறினார். அதை தொடர்ந்து கடந்த வாரம் கவுதம் அதானி முதல் முறையாக 2-வது இடத்துக்கு முன்னேறினார். தற்போது 3-வது இடத்துக்கு பின் தங்கி உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.