;
Athirady Tamil News

தமிழரசனின் குடும்பத்துக்கு 4 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது!!

0

பசறை- கணவரல்ல தோட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தமிழரசன் கணேச மூர்த்தியின் குடும்பத்தினருக்கு 40 இலட்ச ரூபாய் நஷ்ட ஈட்டு தொகை இன்றைய தினம் வழங்கப்பட்டது.

தமிழரசன் கணேச மூர்த்தியின் அகால மரணம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியதோடு பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தாருக்கு நியாயமான இழப்பீட்டுத் தொகை ஒன்று வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் தொழில் அமைச்சரிடம் முன் வைத்தார் .

அதற்கு பதில் அளித்த தொழில் அமைச்சர் மனுஷன நாணயக்கார கூடிய விரைவில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார்.

அதற்கமைய இன்றைய தினம் உயிரிழந்த தமிழரசன் கணேச மூர்த்தியின் குடும்பத்தினருக்கு 4 மில்லியன் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.