;
Athirady Tamil News

யாழ்.போதனாவில் இரத்தங்களுக்கு தட்டுப்பாடு ; குருதி கொடையாளர்களை நாடி நிற்கும் இரத்த வங்கி!!

0

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலை இரத்த வங்கியில் இரத்த வகைகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக இரத்த வங்கி பிரிவினர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக B+ மற்றும் O+ ஆகிய இரத்தங்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்தனர்.

இரத்த தானம் செய்ய விரும்பும் குருதி கொடையாளர்கள் யாழ்.போதனா வைத்திய சாலையின் பின் புறமாக அமைந்துள்ள 12ஆம் இலக்க நுழைவாயில் ஊடாக இரத்த வங்கிக்கு தினமும் காலை 08 மணி முதல் மாலை 05 மணி வரையில் நேரில் சமூகம் அளித்து குருதி கொடை வழங்கலாம்.

அதேவேளை மேலதிக விபரங்கள் தேவைப்படினும் , இரத்த தான முகாம்களை ஒழுங்கமைப்பு செய்ய விரும்புவோரும் 0772105375 மற்றும் 0212223063 எனும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ள முடியும் என தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.