;
Athirady Tamil News

புதிதாக 210 பேருக்கு தொற்று- கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 ஆயிரமாக சரிவு..!!

0

இந்தியாவில் புதிதாக 210 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. கடந்த 7-ந்தேதி பாதிப்பு 166 ஆக இருந்தது. நேற்று முன்தினம் 241 ஆகவும், நேற்று 249 ஆகவும் உயர்ந்தது. இந்நிலையில் இன்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 74 ஆயிரத்து 649 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 39 ஆயிரத்து 948 பேர் குணமடைந்துள்ளனர். இதில் நேற்று 390 பேர் அடங்குவர். தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 4,047 ஆக சரிந்துள்ளது. இது நேற்றைவிட 181 குறைவு ஆகும். கொரோனாவால் புதிய உயிர் இழப்புகள் எதுவும் இல்லை. கேரளாவில் விடுபட்ட பலிகளில் 1-ஐ கணக்கில் சேர்த்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,654 ஆக உயர்ந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.