;
Athirady Tamil News

கால்நடைகளின் மாதிரிகள் பரிசோதனை!!

0

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், துணுக்காய், கரைதுறைப்பற்று போன்ற பிரதேசங்களில் மண்டோஸ் புயலின் தாக்கத்தினால் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தினால் இதுவரை 800 கால்நடைகள் உயிரிழந்துள்ள நிலையில், குறித்த கால்நடைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன

மாங்குளம் பகுதியில் உள்ள மாவட்ட விலங்கு புலனாய்வு நிலையத்திற்கு வருகை தந்த பெரதெனிய பல்கலைக்கழககத்தின் கால்நடை வைத்திய ஆராச்சி நிறுவகத்தின் குழுவினர் குறித்த மாதிரிகளை எடுத்துச் சென்றுள்ளனர்.

கால் நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் கேமாலி கொத்தலாவலவின் பணிந்துரைக்கமைய பேராதெனிய பல்கலை கழகத்தின் கால்நடை வைத்திய ஆராய்ச்சி நிறுவகத்தின் குழு இரசாயன பரிசோதனையினை மேற்கொள்வுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.