;
Athirady Tamil News

மண்டபத்தில் இருந்து கடல் வழியாக தப்பி வந்த இருவர் கைது!

0

இந்தியா, தமிழக மண்டபம் முகாமில் இருந்து தப்பி வந்த இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு , ஊர்காவற்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக தமிழகம் சென்று இருந்தனர்.

அங்கு அவர்களை தமிழக கடலோர பாதுகாப்பு பிரிவினர் விசாரணை செய்த பின்னர் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில் மண்டபம் முகாமில் இருந்து தப்பியோடிய இருவரும் , தமிழகத்தில் இருந்து படகொன்றில் சட்டவிரோதமான முறையில் யாழ்ப்பாணம் வேலணை கடற்பரப்பினூடாக இலங்கையை வந்தடைந்த போது கடல் சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த , கடற்படையினரால் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் கடற்படையினர் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் , மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.