;
Athirady Tamil News

கோர்ட்டு அறையில் நீதிபதி மீது கல் வீசிய கொலை முயற்சி குற்றவாளி..!!

0

குஜராத் மாநிலம் நவ்சரி மாவட்டத்தில் கீழமை அமர்வு கோர்ட்டு உள்ளது. இந்த கோர்ட்டில் நேற்று கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட தர்மேஷ் ரதோட் என்ற நபர் ஆஜர்படுத்தப்பட்டார். கோர்ட்டு அறையில் ஆஜர்படுத்தப்பட்ட தர்மேஷிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. கூடுதல் அமர்வு நீதிபதி ஏஆர் தேசாய் தலைமையிலிந்த விசாரணை நடைபெற்றது. அப்போது, திடீரென கொலை முயற்சி குற்றவாளி தர்மேஷ் தான் மறைத்து வைத்திருந்த கல்லை நீதிபதியை நோக்கி வீசினார். அதில், உடனடியாக சுதாரித்துக்கொண்ட நீதிபதி தேசாய் கல் வீச்சு தாக்குதலில் இருந்து தப்பினார். இதையடுத்து, தர்மேஷை அங்கிருந்த போலீசார் உடனடியாக தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக தர்மேஷ் மீது மேலும் சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், இது தொடர்பாக பணியை சரிவர மேற்கொள்ள வில்லை என 3 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.