;
Athirady Tamil News

இரண்டு சொகுசு பேருந்துகளுடன் கோடிக்கணக்கான சொத்துகள் பறிமுதல்

0

வெளிநாட்டில் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் கும்பல் தலைவர் ஒருவரால் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட சொத்துக்களை பொலிஸார் முடக்கியுள்ளனர்.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இந்தச் சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பணமோசடி
குறித்த சந்தேகநபர் போதைப்பொருள் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு, தனது நெருங்கிய உறவினர்களின் பெயர்களில் சொத்துக்களைக் கொள்வனவு செய்துள்ளமை மற்றும் பணமோசடி செய்துள்ளமைக்கான சாட்சியங்கள் கிடைத்துள்ளன.

அதன்படி, சட்டவிரோதப் பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட சுமார் 07 கோடி ரூபாய் பெறுமதியான இரண்டு சொகுசு பஸ்கள் நேற்று வியாழக்கிழமை (07) முதல் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்டுள்ளன.

பணமோசடிக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் கீழ், கைப்பற்றப்பட்ட பஸ்களில் ஒன்றின் தற்போதைய உரிமையாளர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் எம்பிலிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.