;
Athirady Tamil News

18ஆம் வளைவு பகுதியில் மண்மேடு சரிந்தது !!

0

இன்று (8​) காலை மஹியங்கனை வீதியின் 18ஆம் வளைவுப் பகுதியில் பாரிய மண்மேடு சரிந்து விழுந்ததால் குறித்த வீதியுடனான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த வீதியின் 14 மற்றும் 15ஆம் வளைவுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளது என்று மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தற்போது மண்மேட்டை அகற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும் குறித்த வீதியைப் பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் பயன்படுத்துமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.