;
Athirady Tamil News

விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியதால் ஆத்திரம்- இரும்பு ராடால் தாக்கி கணவனை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்ற இளம்பெண்!!

0

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அடுத்த லஷ்மி புரத்தை சேர்ந்தவர் நாகேஸ்வர ராவ். இவரது மனைவி ஜெகதீஸ்வரி. தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கணவன், மனைவி இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் நாகேஸ்வரராவ், ஜெகதீஸ்வரியிடம் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். விவாகரத்து நோட்டீசை கண்ட ஜெகதீஸ்வரி அதிர்ச்சி அடைந்து இது குறித்து தனது கணவரிடம் கேட்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது கணவன், மனைவி இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த ஜெகதீஸ்வரி அருகில் இருந்த இரும்பு ராடை எடுத்து நாகேஸ்வரராவ் தலையில் பலமாக தாக்கினார். இதில் நாகேஸ்வரராவ் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. நாகேஸ்வரராவ் வலியால் அலறி துடித்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து விடுவார்களோ என பயந்த ஜெகதீஸ்வரி கணவரை இழுத்துச் சென்று அங்குள்ள தண்ணீர் தொட்டியில் தலையை அழுத்தினார். இதில் மூச்சு திணறி நாகேஸ்வரராவ் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து ஒன்றும் தெரியாதது போல் தனது வீட்டிற்கு வந்துவிட்டார். அக்கம் பக்கத்தினர் நாகேஸ்வரராவ் இறந்து கிடப்பதை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நாகேஸ்வரராவ் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் நாகேஸ்வரராவ் வீட்டிற்கு அவரது மனைவி ஜெகதீஸ்வரி வந்து சென்றது தெரிய வந்தது. ஜெகதீஸ்வரியை பிடித்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தியதில் கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் ஜெகதீஸ்வரியை கைது செய்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.