;
Athirady Tamil News

யாழில் உலக இந்தி தின நிகழ்வுகள்!! (படங்கள்)

0

உலக இந்தி தின நிகழ்வுகள் யாழ் இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றது.

இதன்போது இந்தியா கோர்ணரில் இந்தி மொழி கற்கும் மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பயிற்சியை முடித்த மாணவர்களுக்கு பரிசுகள் நினைவுச்சின்னங்கள் சான்றிதழ்கள் என்பன வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் யாழிற்கான இந்திய தூணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன்,வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன், வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் சிவசுந்தரசர்மா ராஜமல்லிகை உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.