;
Athirady Tamil News

உலகின் மிக நீளமான நதிப்பயண சொகுசு கப்பலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!!

0

உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உலகின் மிக நீளமான ஆற்று சொகுசு கப்பலை பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த சொகுசு கப்பல் வாரணாசியில் தொடங்கி 51 நாட்கள் பயணித்து அசாமின் திப்ருகர் வழியாக, பங்களாதேஷ் சென்றடைகிறது.

மூன்று தளங்கள், 18 அறைகள் கொண்ட இந்த கப்பலில், 36 சுற்றுலாப் பயணிகள் வரை பயணிக்க முடியும். இந்த நிகழ்ச்சியின்போது, ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, பல்வேறு உள்நாட்டு நீர்வழி திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

அதன்படி, காணொலி வாயிலாக வாரணாசியில் சொகுசு கப்பல் எம்வி கங்கா விலாஸ் தொடங்கி வைத்தார். மேலும், ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் பல்வேறு உள்நாட்டு நீர்வழி திட்டங்களும் தொடங்கி வைத்தார். கூடார நகரத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.