;
Athirady Tamil News

தொடர்ந்து மூன்றாவது முறையாக தேசிய புத்தாக்கப் போட்டியில் பதக்கம் வெல்லும் வேம்படி மாணவி!!

0

வருடாவருடம் இலங்கை புத்தாக்குனர் ஆணைகுழுவினரால் (Sri Lanka Inventors Commission) நடாத்தப்படும் பாடசாலை மாணவருக்கான ”சஹசக் நிவமும்” (Sahasak Nimavum ) எனும் பெயரில் நடத்தப்படும் தேசிய புத்தாக்கப்போட்டியின் 2022 ஆம் ஆண்டுக்கான முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை மாணவி ரூபிகா அருந்தவம் வெள்ளிப்பதக்கத்தைப் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.

இதே மாணவி 2021 ஆம் ஆண்டில் குறித்த போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும், 2020 ஆம் ஆண்டில் வெண்கலப் பதக்கத்தையும் பெற்ற ஒர் வளர்ந்து வரும் புத்தாக்குனருமாவார்.

குறித்த மாணவி இந்தோனேசியன் இளம் விஞ்ஞானிகள் கழகமும், மலேசியன் செகி யூனிவேசிற்றியும் இணைந்து (Indonesian Young Scientist Association collaborated with SEGi University Malaysia ) சர்வதேச ரீதியில் பிரயோக விஞ்ஞானத்துறையில் இணையவழியில் நடத்தப்பட்ட புத்தாக்கப் போட்டி மற்றும் கண்காட்சியிலும் கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றதொரு மாணவியுமாவார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.